25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வலையொளி (YOUTUBE) வாயிலாக உரையாற்றினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வலையொளி (YOUTUBE) வாயிலாக உரையாற்றினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து (03.06.2025) உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வலையொளி (YOUTUBE) வாயிலாக உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டின் தொடக்கத்தில் உங்கள் அனைவரிடமும் இணைய வழியில் உரையாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி ஒரு அழியாத செல்வம்.
“வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது, வேந்தராலும் கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது” என்று கல்வியின் உடைய பெருமையை நம் தமிழ் சமூகம் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயர்வாகவே கூறுகிறது.

 ஏன் இந்த கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை தருகிறார்கள், ஏன் எல்லோரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்கிறார்கள் என்றால், கல்வியில் அவர்கள் கற்றுக்கொள்வதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் நிறைய இருக்கின்றது.இந்த கல்வியாண்டில் தொடக்கத்தில் குறிப்பாக இன்று இந்த இணைய வழியில் இருக்கக்கூடிய 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் நீங்கள் கல்வியின் உடைய மிக முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறீர்கள். யார் சிறந்த அறிவாளிகள் என்று கேள்விக்கும் நிறைய பதில்கள் இருக்கிறது. ஆனால், அடுத்தவர்களுக்கான அனுபவங்களிலிருந்து  தங்களுக்கான பாடத்தை கற்றுக் கொள்பவர்கள் தான் சிறந்த அறிவாளிகள் ஆவர். சிறப்பான மதிப்பெண் எடுப்பது என்பது மிகவும் முக்கியம். ஆனால் அதை விட மிகவும் முக்கியம் அவர்களுக்கு எதிர்காலத்தில் உயர்கல்வியில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு தான்.

தேர்வு என்பது வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டே தான் இருக்கும். அது தவிர்க்க முடியாதது.இந்த தேர்வில்; எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும். ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்து இன்னும் சிறிது முயற்சி செய்திருந்தால் இன்னும் மதிப்பெண்கள் அதிகமாக கிடைத்திருக்குமே என்று நினைத்துப் பார்த்தால் அது திரும்ப கிடைக்க முடியாத ஒன்று.எதிர்காலத்தில் இப்படி ஒரு நாட்களை வீணடித்து விட்டோமே அல்லது அந்த நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருந்தால் இன்று நான்; மகிழ்ச்சியாக இருந்திருப்பேனே என்றும், வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று யோசித்தால் நிச்சயமாக அந்த வாய்ப்புகள் பெரும்பாலும் திரும்ப வரப்போவதில்லை.பணியின் மூலமாகவும், கல்வின் மூலமாகவும் நீங்கள் உழைக்க கூடிய உழைப்பு என்பது 17 வயது முதல்  மருத்துவத்துறையிலே அல்லது சட்டக்கல்லூரியிலோ, இந்தியாவிலே தலைசிறந்த கல்லூரியில் நீங்கள் உழைக்க கூடிய உழைப்பு அடுத்து அவர்கள் வாழக்கூடிய 80 ஆண்டுகளுக்கும் மேலாக பலன் கிடைக்கும், அதனால் உழைப்பையும், பலனையும் கணக்கிட்டால் வாழ்க்கையில் எப்போதுமே கிடைக்க கூடிய பலனாகும்.பள்ளி கல்லூரி மற்றும் கல்லூரி கல்வியாக இருக்கட்டும் அல்லது வேலையாக இருக்கட்டும், குறைவான முயற்சியில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்ககூடிய 10 வகுப்பு 11,12 வகுப்பில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதற்கான படிப்பிற்கான வாய்ப்பாக மட்டுமே இருக்கும்.

எனவே, கனவுகளை அடைவதற்குரிய சாத்தியக்கூறுகள், புரிதலும், வழிகாட்டுதலும், கிடைக்கும் கல்வியினை எவ்வாறு தேர்ந்தெடுத்து கல்வி பயணத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். JEE, NET  மற்றும் பொறியியல் தேர்வுகளில் நாம் பெறும் Cutoff மதிப்பெண்களை பெறுவதால் மருத்துவத்துறையில் மூலம் என்ன படிக்கலாம் என்பதை நமக்கு தேர்ந்தெடுக்க ஒரு தூண்டுகோளாகும்.இந்தியாவினுடைய ஒரு தலைசிறந்த கல்வி நிறுவனத்தின் மூலம் மெட்ரிக், சி.பி.எஸ், ஸ்டேட்போர்டு ஆகிய கல்வி நிறுவனங்களில் எந்த வகையான வினா எழுதுவதற்கும் அல்லது ஒரு வரியில் வினா அளிப்பதற்கும் ஏற்றவாறு தன்னுடைய கல்வி அறிவினை உபயோகிக்க வேண்டும்.தொடர்ச்சியாக இருக்கும் வாய்ப்புகள் தான் வெற்றிக்கு அடிப்படை, ஒரு மணி நேரம் கல்விக்காக இருக்கும் நேரம் தான் தன்னுடைய வாழ்நாள் வெற்றிக்கு வழி வகுக்கும், மதிப்பெண் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்கும் வாழ்நாள் நேரத்தினை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News