மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடரில் அவனி லெஹரா தங்கம் வென்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடர் துபாயில், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள் ஸ்டேன் டிங் எஸ்.எச். 1' பிரிவில் இந்தியாவின் அவனி லெஹரா பங்கேற்றார்.
தகுதிச் சுற்றில் 626.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் அவனி, 249.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
கலப்பு 50 மீ., 'பிஸ்டல் எஸ்.எச். 1' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின்சந்தீப் குமார் (543.6 புள்ளி), ஆகாஷ் (539.11) முதலிரண்டு இடங்களைபிடித்தனர்.
அடுத்து நடந்த பைனலில் ஆகாஷ், 223.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சந்தீப் (220.5) வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
0
Leave a Reply