25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி சுற்றுலா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி சுற்றுலா

ஒவ்வொரு வருடமும் எமது ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி சுற்றுலா நடைபெறும்.  தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து நடத்திய மாநில அளவிலான தொல்லியல் கண்காட்சிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆறு முதல் பன்னிரெண்டாம்  வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர். வெம்பக்கோட்டை அகழாய்வு, விஜயகரிசல்குளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கி.மு, கி.பி யில் தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்ணால்  செய்யப்பட்ட பொம்மைகள், பானைகள், முதுமக்கள் தாழிகள் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை மாணவர்கள் கண்டு வியந்தனர். மாணவர்கள் வரலாற்று புத்தகத்தில் கண்டவற்றை நேரிலே கண்டதும் மிகவும் உற்சாகம் அடைந்தனர். ராஜபாளையத்தை சுற்றியுள்ள இடங்களில் மற்றும் கிராமங்களில் கிடைத்த குகை ஓவியங்கள், பலியிடம், சிலைகள், குத்துக்கல் மற்றும் நடுகற்களின் புகைப்படங்களை கண்டு தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மான் கொம்புகள், வேட்டையாட உபயோகித்த ஆயுதங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை கண்டு வியந்து மகிழ்ந்தனர்.இந்த கண்காட்சியில் மாணவர்களோடு ஆசிரியர்களும், முதல்வரும்,  தாளாளரும்  கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *