25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி சுற்றுலா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி சுற்றுலா

ஒவ்வொரு வருடமும் எமது ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி சுற்றுலா நடைபெறும்.  தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து நடத்திய மாநில அளவிலான தொல்லியல் கண்காட்சிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆறு முதல் பன்னிரெண்டாம்  வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர். வெம்பக்கோட்டை அகழாய்வு, விஜயகரிசல்குளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கி.மு, கி.பி யில் தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்ணால்  செய்யப்பட்ட பொம்மைகள், பானைகள், முதுமக்கள் தாழிகள் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை மாணவர்கள் கண்டு வியந்தனர். மாணவர்கள் வரலாற்று புத்தகத்தில் கண்டவற்றை நேரிலே கண்டதும் மிகவும் உற்சாகம் அடைந்தனர். ராஜபாளையத்தை சுற்றியுள்ள இடங்களில் மற்றும் கிராமங்களில் கிடைத்த குகை ஓவியங்கள், பலியிடம், சிலைகள், குத்துக்கல் மற்றும் நடுகற்களின் புகைப்படங்களை கண்டு தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மான் கொம்புகள், வேட்டையாட உபயோகித்த ஆயுதங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை கண்டு வியந்து மகிழ்ந்தனர்.இந்த கண்காட்சியில் மாணவர்களோடு ஆசிரியர்களும், முதல்வரும்,  தாளாளரும்  கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News