தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் ஆகியவை ஊதியத்துடன் கூடிய விடுமுறை
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் நாளன்று (19.04.2024) தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் ஆகியவை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தி விருதுநகர் மற்றும் சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்களின் கூட்டறிக்கை.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன் படி தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வாக்கு பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கீழ்கண்ட கட்டுப்பாட்டு குழு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply