இராஜபாளையம் வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, I A S., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சம்மந்தபுரம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளியிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.
மேலும், இராஜபாளையம் வட்டார இயக்க மேலாண்மை அலகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனையகமான மதி பல்பொருள் அங்காடியினை நேரில் சென்று பார்வையிட்டு, சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண் தொழில் முனைவோர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் தலா ஒரு இலட்சம் வீதம் 3 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது, திட்ட இயக்குனர் மாவட்ட (ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சீர்மரபினர் நலவாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, இராஜாபாளையம் வட்டாட்சியர் திரு.ராஜீவ் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply