2024ம் ஆண்டில் உருவாகும் சூர்யா -சிவா இயக்கத்தில் கங்குவா
சினிமாவில் பிரம்மாண்டங்களை நம்பி படம் எடுப்பவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். ஷங்கர், ராஜமௌலி என இந்தப் பட்டியலின் நீளம் அதிகம். ராஜமௌலி துவங்கிவைத்த ட்ரெண்ட், தற்போது ஏராளமான இயக்குநர்கள் பிரம்மாண்டத்தின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். பாகுபலி படத்தை துவங்கி தற்போது அதிகமான வரலாற்று படங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழிலேயே அடுத்தடுத்த வரலாற்று கதைக்களங்களில் படங்கள் அறிவிக்கப்பட்டு டைரக்ட் செய்யப்பட்டு வருகின்றன. சூர்யா -சிவா இயக்கத்தில் தற்போது கங்குவா படத்தின் சூட்டிங் ஆல்மோஸ்ட் நிறைவடைந்துள்ளது.இந்தப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பொருட்செலவுடனும் இயக்கி முடிக்கப்பட்டுள்ளது. கமர்ஷியல் இயக்குநராக ரசிகர்களை கவர்ந்த சிவா, இந்தப் படத்தில் தன்னுடைய பிரம்மாண்ட வித்தையை களமிறக்கியுள்ளார்.
சர்வதேச அளவில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களின் மவுசு காணப்படுகிறது. நம்மால் இயங்க முடியாத மாய உலகை இந்தப் படங்களின் மூலம் ரசிகர்கள் எக்ஸ்பீரியன்ஸ் செய்துக் கொள்வதே இந்தப் படங்களின் வெற்றி. அந்த வகையில் இந்திய அளவிலும் இதுபோன்ற பல பேன்டசி படங்களை பார்க்க முடிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலங்களிலேயே தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இதுபோன்ற படங்கள் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் வரலாற்று பின்புலத்தில் தற்போது அதிகளவில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ராஜமௌலியின் பாகுபலி படங்கள்: ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் அதன் தொடர்ச்சியாக வெளியான பாகுபலி 2 ஆகிய படங்கள் அந்த காலத்தில் மக்கள் இப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என்ற பிம்பத்தை ரசிகர்களுக்கு கொடுத்தன. படத்தின் நடிகர்கள், நடிகைகளின் தேர்வும் இந்தப் படங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, ராணா என இந்தப் படத்தின் நடிகர்கள் அந்த கேரக்டர்களாகவே மக்களால் பார்க்கப்பட்டனர். சர்வதேச அளவில் இந்தப் படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்தது இந்தப் படங்களின் மேக்கிங்கிற்கு கிடைத்த வெற்றி.
அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள்: இந்தப் படங்கள் கொடுத்த வெற்றி மற்றும் வரவேற்பு காரணமாக தொடர்ந்து அடுத்தடுத்த வரலாற்றுப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழில் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா படம் இயக்கி முடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை இயக்குநர் சிவா இயக்கி முடித்துள்ளார். கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள இந்தப் படம் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் படம் உருவாகவுள்ளது. படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
0
Leave a Reply