இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
பிறை கண்டு கொண்டாடும் பெருநாள் ஈகையும் நட்பையும் போற்றும் நாள் .
இந்நன்னாளில் உங்கள் எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க,
இந்த புனித நாளானது உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தட்டும்.
ரமலானின் வாசலில் மூன்று கதவுகள் முதல் கதவை திறந்தவன் அருளை பெறுகிறான் இரண்டாம் கதவை கடந்தவன் பாவமன்னிப்பை வரமாக பெறுகிறான இறுதிக் கதவை அடைந்தவன் நரகத்தின் வாயிலை விட்டும் சுவனத்தில் வாழ்கிறான்
வீட்டின் சுவர்களை வண்ணங்களால் அலங்கரித்து கூரையின் தூசுக்களை சுத்தப்படுத்தி எழிலாக்குவதை போல உள்ளத்தின் அடித்தளத்தில் நன்மையான ரமலானின் நிலையான தூண்களால் சுவர்க்கத்தில் விலைமதிப்பான அமல்களால் மாளிகை கட்டு முடித்தால் இன்னும் எதையாவது சேர்த்துக் கொள்.உங்களுடைய எல்லா தேவைகனையும் இந்நன்னாளில் அல்லாஹ் நிறைவேற்றுவாராக...
இனிய ரமலான் மாதம் கடைபிடிக்க வேண்டியவை
ரமலான் என்பது பொறுமை, அன்பு மற்றும் தான தர்மத்தின் அடையாளம்
ரமலானில் 1 ரூபாய் தர்மம் செய்தால் 70 மடங்கு முதல் 700 மடங்கு வரை நன்மை கிடைக்கும்
நம்மிடம் உள்ள பழைய கிழிந்த ஆடைகளை கொடுக்கக் கூடாது. நாம் எதை விரும்பி அணிகிறோமோ அதையே கொடுக்க வேண்டும்
தர்மம் செய்வதால் நமது சொத்துக்கள் குறையாது. மாறாக சொத்துக்கள் சுத்தம் செய்யப்பட்டு பெருகும் மற்றும் பாதுகாக்கப்படும்.
பசியோடு இருப்பவருக்கு உணவிடும் போது கிடைக்கும் அந்த மகிழ்ச்சி மனதுக்கு பெரிய நிம்மதியை தரும்..
கொடுப்பவருடைய கை எப்போதும் உயர்ந்தது.
0
Leave a Reply