ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பயிர்சேதாரம் கணக்கீட்டின் உண்மைத்தன்மை மற்றும் பேச்சில்லா கிராமப்புற பகுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பயிர்சேதாரம் கணக்கீட்டின் உண்மைத்தன்மை மற்றும் பேச்சில்லா கிராமப்புறப் பகுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (17.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, புயலினால் ஏற்பட்டுள்ள பயிர்சேதம் மற்றும் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து கிராமப்புற மக்களிடம் கலந்துரையாடினார்.
அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செட்டிப்பட்டி மற்றும் பாட்சாகுளத்தில் உள்ள பேச்சில்லா கிராமத்தினை ஆய்வு செய்து, அங்கு பொதுமக்களிடம் குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், இனாம் ரெட்டியாபட்டி கிராமத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையில் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கான பயிர் சேதாரம் கணக்கீட்டை வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதின் உண்மைத்தன்மை குறித்து விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, சங்கரலிங்காபுரம் ஊராட்சியில் தன்னர்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட மருத்துவ முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், சிவகாசி வட்டம், செவலூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு பசுமை திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், வட்டாட்சியர், வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்;பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply