இந்தியா ஆசிய வில்வித்தையில் காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் ,பைனலுக்கு முன்னேறியது.
ஆசிய வில்வித்தை 'ஸ்டேஜ் 1' தொடர் தாய்லாந்தின்பாங்காக் நகரில் ,காம்பவுண்டு பிரிவில் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் தகுதிச்சுற்றில் 'நம்பர் -1' இடம் பெற்ற இந்திய ரஜத் சவுகான் சிகிதா ஜோடி, நேரடியாக காலிறுதியில் பங்கேற்றது.
இதில் 159-155 என்ற கணக்கில் சீன தைபே அணியை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின.
இந்திய ஜோடி 157-153 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்து, இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது.
பெண்களுக்கான ரிகர்வ் பிரிவு கலப்பு அணி கள் போட்டிக்கான தகு திச்சுற்றில் இந்தியாவின் தேவாங்,ருமா ஜோடி முதலிடம் பிடித்தது.
நேரடியாக காலிறு தியில் களமிறங்கியது. இதில், தரவரிசையில் 9வது இடம் பிடித்த வியட் நாம் ஜோடியிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
0
Leave a Reply