தனிநபர் பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜோதி .
இந்தியாவின் ஜோதி தனிநபர் பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு காலிறுதியில் 147 -145 என தென் கொரியாவின் யூக்யுனை வீழ்த்தினார். மற்றொரு போட் டியில் இந்தியாவின் பிரித்திகா 148-146 என சக வீராங்கனை சிகிதாவை வென்றார்.
இந்தியாவின் அபிஷேக், பிரதமேஷ், சாஹில் ராஜேஷ் அடங்கிய அணி ஆண்களுக்கானகாம்பவுண்டு அணிகள் பிரிவில் பங்கேற்றது. காலிறுதியில் 235-234 என மலேசியாவைவீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, தாய்லாந்து மோதின.இப்போட்டி 235-235 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் ஆப்பில்' இந்திய ஆண்கள் அணி, பைனலுக்கு முன்னேறியது. நாளை கஜகஸ்தானை சந்திக்க உள்ளது.
இந்திய பெண்கள் அணி காலிறுதியில்'ரீகர்வ் பிரிவில் உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. அன்ஷிகா குமாரி, அன் கிதா, சங்கீதா இடம் பெற்ற இந்திய அணி, 4-4 என சமன் செய்தது. பின் நடந்த 'ஷூட் ஆப்' முறையில் இந்தியா 24-27 என தோற்றது.
0
Leave a Reply