இஸ்ரோ ஏவும் கனரக அமெரிக்க செயற்கைக் கோள்.
அண்மையில்' நிசார் 'செயற்கைக்கோளை வெற்றிகர மாக விண்ணில் செலுத் தியது இஸ்ரோ. அடுத்து, அமெரிக்கா உருவாக் கிய, 6,500 கிலோ எடையுள்ள 'ப்ளூபேர்ட்' (BlueBird) என்ற செயற் கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயா ராகிறது.
அதிநவீன 'எல்.வி. எம்.3எம்5' ராக்கெட் மூலம் இந்தச் செயற் கைக்கோளை ஏவ இஸ்ரோவிஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இதனால்,சர்வதேச விண்வெளிச் சந்தையில் இஸ்ரோவின் நம்பகத் தன்மை அதிகரிக்கும்.
'ப்ளூபேர்ட்' செயற் கைக்கோளில், புரட்சிக ரமான தொழில்நுட்பம் உள்ளது.எந்தவொரு சிறப்பு கருவி யும் இல்லாமல், சாதாரண மொபைல் போன்களுக்கு, செயற்கைக் கோளிலிருந்தே, நேரடி யாக அதிவேக இணைய இணைப்பை வழங்குவதே இதன் தனிச்சிறப்பு.
'ப்ளூபேர்டின்' 64 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பிரமாண் டமான ஆன்டெனா, தொலைதூரக் கிரா மங்களில் இருப்போரின் மொபைலுக்கும் நேரடியாக இணைய சேவையை வழங்கும்.அமெரிக்காவின் இவ்வளவு பெரிய, முக்கியமான செயற் கைக்கோளை இஸ்ரோ ஏவுவது, இரு நாடுக ளுக்கும் இடையேயான விண்வெளி ஒத்துழைப் பை வலுப்படுத்தும்.
இது இந்தியாவின் தொழில்நுட்ப ஆற்றலுக்கு ஒருசான்றாகஇருப்பதோடு,உலக விண்வெளித்தொழில்நுட்பசந்தையில், இந்தியாவின் முக்கியத் துவத்தையும் உலகிற்கு உணர்த்துகிறது.
0
Leave a Reply