25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >> ந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும். >>


லிச்சி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லிச்சி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

லிச்சி பழத்தில் வைட்டமின் சி, பி6, நியாசின், ரிபோபிளவின், போலேட், பொட்டாஷியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும், நார்ச்சத்து, புரதம், 'பாலிபீனாலிக்' கூறுகளும் அதிக அளவில் உள்ளன.

லிச்சி பழத்தில், நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமானப் பிரச்னைகளை போக்கும் தன்மையுடையது. சிறந்த செரிமானத்தின் மூலம்,குடல் இயக்கத்தை மென்மையாக்குகிறது. மலச்சிக்கல் மற்றும் குடல் நோய்களை குறைக்கிறது.

லிச்சியில் உள்ள வைட்டமின் சி, சிறந்த ஆக்ஸிஜனேற்றி ஆகவும், வெள்ளை ரத்த அணுக்களின் செயல்பாட்டை சீராக்கவும், கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கவும் உதவுகிறது. இதனால், புற்றுநோய், இதயநோய், விரைவான வயது மூப்பு போன்ற நோய்களிலிருந்து விடுபடலாம்.

லிச்சியில்,'பொட்டாஷியம்' அதிகமாககாணப்படுகிறது.அதனால், உடலில்நீர்சக்தியைசமன் செய்கிறது.உலர்ந்தலிச்சியின்,'பொட்டாஷியம்' அளவு, 'பிரஷ்' லிச்சியை விட, மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

லிச்சி பழத்தில்தாமிரம்அதிகஅளவுகாணப்படுகிறது.சிவப்புஅணுக்களின்உற்பத்தியில், பொதுவாகஇரும்புசத்துக்களுடன், தாமிரமும்இணைந்திருக்கும். இதனால், லிச்சியில் தாமிரம் அதிகமாக இருப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் புத்துணர்ச்சி அடையும்.

மேலும், உடல் உறுப்புகளுக்கும், செல்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவு கிடைக்க பெறும்.லிச்சியில், சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள், குறைந்த அளவு உட்கொள்வது நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News