25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


May 7 th விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

May 7 th விளையாட்டு போட்டிகள்

 .கிரிக்கெட் பெண்கள்  

பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்,. இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதுகின்றன.

நேற்று இந்திய அணி தனது கடைசி லீக் போட்டி யில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 314/7 ரன் எடுத்து தோல்வியடைந்தது.

முடிவில் 4 போட்டியில் 3 வெற்றியுடன் 6 புள்ளி பெற்ற இந்திய அணி பைனலுக்கு (மே 11) முன் னேறியது.

வில்வித்தை 

சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2  சீனாவின் ஷாங்காய் நகரில் ,காம்பவுண்டு ஆண்கள் பிரிவில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி நேரடியாக காலிறு தியில் பங்கேற்றது. இதில் பிரிட்டனை 239-232 என வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் டென்மார்க்கை  எதிர்

கொண்டது. முதல் இரு சுற்று முடி வில் 115-118 என பின் தங்கிய இந்தியா, கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட 232-231 என ' வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. 

பாட்மின்டன் 

'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனதைபேயில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சங்கர் முத்து சாமி மோதினர். ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-18 என சீன தைபேயின் சியா ஹாவோ லீயை வீழ்த் தினார் .

இந்தியாவின் தருண் 21-17, 19-21, 21-12 என ஜப்பானின் ஷோகோ ஒகாவாவை தோற்கடித்தார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, அனுபமா உபத்யயா மோதினர்.உன்னதி 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News