25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


பூரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் பறந்த மர்ம ட்ரோன்.. பாதுகாப்பு அதிகரிப்பு..!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் பறந்த மர்ம ட்ரோன்.. பாதுகாப்பு அதிகரிப்பு..!

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் நேற்று மர்ம ட்ரோன் ஒன்று பறந்ததை அடுத்து, கோவில் வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.06/01/2025அதிகாலை4 மணிக்கு பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தை சுற்றி மர்ம ட்ரோன் பறந்ததாகவும், சுமார்100 அடி உயரத்தில் பறந்த அந்த ட்ரோன் கோயிலை வட்டம் அடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனை சிலர் வீடியோ மற்றும்புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏற்கனவே பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மீறி ட்ரோன் பறந்தது. இதற்கு யார் காரணம் என்ற என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வரும்8ஆம் தேதி முதல்10ஆம் தேதி வரை வெளிநாட்டு இந்தியர் தினம் கொண்டாடப்பட இருக்கின்றது.9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதில் கலந்து கொள்ள உள்ள நிலையில், பூரி ஜெகநாதர் கோயிலை சுற்றி மர்ம ட்ரோன் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News