தேசிய ரோல் பால்போட்டி தமிழக அணி2வதுஇடம்.
திருச்சி, தொட்டியம், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லுாரியில், தேசிய 21வது சீனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிராஉள்ளிட்ட மாநிலங் களில் இருந்து,600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இறுதிப் போட்டியில், ஆண்கள் பிரிவில் உத்தரபிரதேச அணி 6 கோல் அடித்து, சாம்பியன் ஆனது.
பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் ராஜஸ்தான், தமிழக அணிகள் மோதின. ராஜஸ்தான் 4கோல்கள் அடித்து சாம்பியன் பட்டம் வென்றது. தமிழகம் மூன்று கோல் அடித்து இரண்டாம் இடத்தை பிடித்தது. இரண்டுமுறை சமஎண்ணிக்கையில் கோல் அடித்த நிலையில், கோல்டன் கோல் வாய்ப்பில், தமிழக அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது.
0
Leave a Reply