ஒலிம்பிக் சாம்பியன் ஆக்சல்சென் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
விக்டர் ஆக்சல்சென்டென்மார்க்கை சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீரர். நம்பர் ஒன் வீரரான ஆக்சல்சென் 2020 மற்றும் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
2017 மற்றும் 2022-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பிலும், 2020, 2022-ம் ஆண்டு ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனிலும், ஐரோப்பிய சாம்பி யன்ஷிப்பில் ஒற்றையரில் 3 முறையும், அணிகள் சாம்பியன்ஷிப்பில் 6 முறையும் மகுடம் சூடியுள்ளார். தரவரிசையில் 183 வாரங்கள் 'நம்பர் ஒன்இடத்தில் இருந்தார் . சீனாவின் லின்டானுக்கு பிறகு ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இருமுறை மகுடம் சூடிய வீரர் இவர்தான்.
விக்டர் ஆக்சல்சென் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதுகுவலி பிரச்சினையால் எந்த போட்டியிலும் .விளையாடாமல் ஒதுங்கி இருந்தார். தனது 32-வது வயதிலேயே பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
0
Leave a Reply