தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (17.07.2025) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.27.05/-இலட்சம் மதிப்பிலான விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் வழங்கினார்.
கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடையும் பதிவு பெற்ற,பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளியின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை ரூ.5,00,000/- வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த திரு.பாண்டி த/பெ.முத்துக்குமார், திரு.சின்னமாரிமுத்து த/பெ.சகாதேவன், திரு.சம்பத்குமார் த/பெ.வேலுச்சாமி, திரு.பவுன்ராஜ், த/பெ.கருப்பையா மற்றும் திரு.கருப்பசாமி தஃபெ.சங்கிலி ஆகிய 5 கட்டுமானத் தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.25,00,000/- மதிப்பிலான உதவித்தொகைகள் பெறுவதற்கான உத்தரவினையும்,
திரு.சோணமுத்து த/பெ.மாசிலாமணி என்ற பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளியின் சாலை விபத்து மரணத்திற்கு ரூ.2,05,000/- உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினையும், என ஆக மொத்தம் 6 கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.27,05,000/- மதிப்பிலான உதவித்தொகைகள் பெறுவதற்கான உத்தரவினை மரணமடைந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிதாஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply