25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பஞ்சகவ்யா   கரைசல் . (பயிர் வளர்ச்சி ஊக்கி)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பஞ்சகவ்யா கரைசல் . (பயிர் வளர்ச்சி ஊக்கி)

 பஞ்சகவ்யா கரைசலானது 75 சதவீதம் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், 25 சதவீகிதம்  பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது. பயிர்கள் ஒரே சீராக வளர்கிறது. சுற்றுச் சூழலுக்கு  பாதிப்பு ஏற்படுத்தாது, பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கிருமி நாசினி யாகவும் பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்

பசுஞ்சாணம் புதியது 5 கிலோ, பசு கோமியம் 4 லிட்டர், பசும்பால் 3 லிட்டர், புளித்த தயிர் 2 லிட்டர், பசு நெய் அரை லிட்டர், இளநீர் 2, வாழைப் பழம் 12. நாட்டு சர்க்கரை அரை கிலோ, சிறிதளவு சுண்ணாம்பு, தோட்டத்து மண் சிறிதளவு.

சாணத்தை நெய்யுடன் பிசைந்து பிளாஸ்டிக் வாளியில் 3 நாட் கள் வைக்க வேண்டும். தினம் ஒரு முறை இதை கிளற வேண்டும். நான் காவது நாள் அகலமான மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது டிரம்மில் அனைத் துப் பொருட்களையும் சேர்த்து கையால் கரைத்து கம்பி வலையால் வாய்ப் பகுதியை மூடி நிழலில் வைக்க வேண்டும்.

தினமும் காலை, மாலையில் பல முறை கலக்கி விட்டால் கலவைக்கு அதிகக் காற்றோட் டம் கிடைத்து நுண்ணுயிர்கள் பெருகும். இப்படி 22 நாட்கள் கலக்கி வந்தால் பஞ்சகவ்யா கரைசல் தயாராகி விடும். இதை ஆறு மாதம் வரை தினமும் கலக்கி விட்டு கெடாமல் பயன்படுத்தலாம்.

தண்ணீர் குறைந்து கலவை கெட்டியானால் பயிருக்கு தெளிக்கும் அளவிற்கு மட்டும் எடுத்து சேர்த்து கலக்கி பயிர்களுக்கு பயன்படுத்தலாம். இந்த கலவைக்கு பலன் உண்டு.

பயன்படுத்தும் முறை

காய்கறிகள், கொடிவகைகள், பணப்பயிர்கள், தானியப்பயிர்கள், பய.றுவகைப்பயிர்கள், எண் ணெய்வித்து, மரப்பயிர்களுக்கு பயன்படுத்தலாம். காய்கறி பயிர்களில் பூக் கள் பூக்கும் தருணத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி கரைசலை கலந்து வாரம் இரு முறை தெளிக்கலாம்.

மா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, நெல்லி, வாழை மரங் களில் பூ விடுவதற்கு முன் மாதம் ஒரு முறையும்,பூ விட்ட பின் 5 நாட்களுக்கு ஒருமுறை யும் பிஞ்சு விட்ட பின் பும் தெளிக்கலாம்.ஒரு கிலோ விதைக்கு 200 மில்லி பஞ்சகவ்யா கரைசலை சேர்த்து30  நிமிடம் ஊறவைத்த பின் விதைக்கலாம்.

கெட்டித்தோல் உள்ள  விதைகளுக்கு 60நிமிடம் ஊறவைக்க வேண்டும். 100 லிட்டர் தண்ணீருக்கு 20 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலைகலந்து சொட்டு நீர்ப் பாசனத்தில் பயன் படுத்தலாம். அல்லது எருவில் கலந்து ஊட்ட மேற்றியும் இடலாம்.

பஞ்சகவ்யாவில் பயிருக்குத் தேவையான விட் டமின் ஏ, பி, கொழுப்புச் சத்து, சைட்டோசைனின் வளர்ச்சி ஊக்கி, அமினோ அமிலம், தாதுக்கள் என 13 வகையான சத்துக்கள் உள்ளன. குறைந்த செலவில் நிறைந்த மகசூல் கொடுக்கக் கூடி யது. மண்ணில் நுண்ணுயி ரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். காய்கறிக ளுக்கு சுவையும், மண மும் கூடும். காய்கறிகள் தரமானதாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News