பரணிகா இந்திய ஓபன் 'போல் வால்ட்' போட்டியில் தங்கம் வென்றார் .
இந்திய ஓபன் 'ஜம்ப்ஸ்' போட்டிகள் பெங்களூருவில், பெண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் தமிழகத்தின் பரணிகா, 4.10 மீ., தாண்டி தங்கத்தை கைப்பற்றினார்.
பெங்களூரு, தேசிய சிறப்பு மையம் அணியின் சிந்துஸ்ரீ (3.95 மீ.,) வெள்ளி, மத்திய தொழில் பாதுகாப்பு படை அணியின் பபிதா படேல் (3.90 மீ.,) வெண்கலம்வென்றனர். மற்றொரு தமிழக வீராங்கனை கார்த்திகா (3.80 மீ.,) 5வது இடம்பிடித்தார்.
தமிழகத்தின் சரண் ,ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் (7.77 மீ.,) வெண்கலம், கர்நாடகாவின் புருஷோத்தம் (7.87 மீ.,), ஒடிசாவின் சருண் பாயாசிங் (7.78 மீ.,) தங்கம், வெள்ளி வென்றனர்.
தமிழகத்தின் ஹரிகரன் ரமேஷ் ஆண்களுக்கான (20 வயது ) 'போல் வால்ட்' போட்டியில் (4.55 மீ.,) தங்கம் வென்றார். ஹர்ஷினி பெண்களுக்கான (18 வயது) உயரம் தாண்டுதலில் (1.50 மீ.,) தங்கம் வென்றார்.
0
Leave a Reply