25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்  இராஜபாளையம் மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இராஜபாளையம் மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் .

மாசி மாதம் 09ம் தேதி முதல் மாசி மாதம் 18ம் தேதி வரை (21.02.2026 02.03.2026)

இராஜபாளையம் நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் எனது தந்தையாரின் தாத்தா ஸ்ரீ பி.ஏ. சின்னையராஜா அவர்களால் மணல் மேட்டில் கேட்ட மணி சப்தத்தைக் கொண்டு தோண்டி எடுக்கும் போது கிடைத்த திருக்கோவிலாகும். புராதனமும், பாரம்பரியமும் மிக்க இத்திருக்கோவிலை எனது தாத்தா பெருந்தகை ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த தெய்வ பொக்கிஷமாகக் கருதி பரம்பரை அறங்காவலராக இருந்து பல திருப்பணிகள் செய்து மகிழ்ந்தார்கள். அவரைத் தொடர்ந்து எனது தகப்பனார் "குருபக்தமணி" ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்கள் 1977,2001 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இராஜகோபுரமும், கொடிமரமும், அருள்மிகு ஐயப்பன் திருகோவிலும் ஸ்தாபித்து ஸ்வாமீ, அம்பாளுக்கு தங்ககவசமும் நூதன வசந்த மண்டபம் போன்ற பல்வேறு திருப்பணிகள் செய்து மூன்று முறை கும்பாபிஷேகம் செய்து மகிழ்ந்தார்கள். 

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ,இத்திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆஸ்திக மஹாஜனங்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ மீனாக்ஷி ஸமேத சுந்தரேச்வரர் திருவருளுக்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News