விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (21.02.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
வனவிலங்குகளால் பயிர் சேதம் குறித்து நேர்முக கடிதம் அரசுச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும், வனவிலங்குகளால் பயிர் சேதம், மனித உயிர் சேதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என துணை இயக்குநர், மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் அவர்கள் தெரிவித்தார்.
கண்மாய்கள் மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில் அப்பகுதிக்குரிய வட்டாட்சியர், செயற்பொறியாளர், நீர்வளத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, விருதுநகர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்கள். சீமைக் கருவேல மரங்களை அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே வனவிலங்குள் காட்டுப்பன்றிகள் பயிர் சேதத்தினை தடுக்க முடியும் என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணவும், மனுக்களுக்கான பதில்களை அனைத்து அலுவலர்களும் மனுதாரருக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் உரிய அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திரு.தேவராஜ்,இ.வ.ப., வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,) திருமதி நாச்சியார் அம்மாள், மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநர் உட்பட பல துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
0
Leave a Reply