25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


யானை புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யானை புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாளையம் வனச் சரகங்களுக்கு இடையே உள்ள ராக்காச்சி அம்மன், சேத்துார், விரியன்கோயில், அணைத்தலை ஆறு, கல்லாத்து ஓடை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இரவு நேரத்தில் மலையடிவார விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் ராஜபாளையம் 6வது மைல் நீர்தேக்கம் கல்குவாரி ஒட்டி வானூத்தி பறம்பு அருகே  தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை 40 தென்னங்கன்று குருத்துகள், வளர்ந்த மா மரக்கிளை பாதியாக உடைத்தும், குடிநீர் குழாய்களை உடைத்தும், வாழைக் கன்றுகளை தின்றும் சேதப்படுத்தி உள்ளது.  மீண்டும் இவற்றை உருவாக்க லட்சக்கணக்கில் பணமும், காலமும் தேவைப்படும். தகுந்த இழப்பீடு வழங்குவதுடன், யானை புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News