25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  அவர்கள் மி.புளியங்குளம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் மி.புளியங்குளம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், மி.புளியங்குளம் கிராமத்தில்  (15.05.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மி.புளியங்குளம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அதனடிப்படையில், இன்று மி.புளியங்குளம் கிராமத்தில், ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள இடங்கள் குறித்தும், புளியங்குளம் கண்மாயில், இருந்து நிரம்பி வரும் மறுகால் நீர், ரயில்பாதையை கடந்து செல்ல ஏதுவாக மாற்று ஒடைப்பாதை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் திரு.பொன்னுத்தம்பி(திருச்சுழி), திருமதி காளீஸ்வரி சமயவேலு (நரிக்குடி),  திருச்சுழி வட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி பத்மினி, திரு.புகழேந்தி,  மண்டல துணை வட்டாட்சியர் திரு.திருக்கண்ணன், வருவாய் ஆய்வாளர் திருமதி மல்லிகா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News