போப் ஆண்டவர், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாபெரும் தலைவர் மரணமடைந்தார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி, போப் ஆண்டவராக பொறுப்பேற்று தனது பெயரை "போப்" பிரான்சிஸ்" என்று மாற்றிக் கொண்டார். 12 ஆண்டுகள் போப் பதவியில் இருந்த அவர் , தனது 89 வது வயதில் (போப் பிரான்சிஸ் 1936 - 2025 )உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
போப் ஆண்டவர். உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாபெரும் தலைவர். ரோம் நகர போப், புனித பீட்டரின் வாரிசு, வாடிகன் நகர தலைவர் என்ற பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர்.போப் ஆண்டவருக்கு போன்டிபெக்ஸ் மேக்சிமஸ் என்ற பட்டமும் உண்டு. இது "மிக உயர்ந்த பூசாரி" என்று பொருள்படும்.
மனித நேயம் மிக்க மறைந்த போப் பிரான்சிஸ், ஒரு மதத்தின் தலைவராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார். அவரது மரணம் உலகத்திற்கே மாபெரும் ஓர் இழப்பாகும். அனைத்து நாடுகளிலும் அவருக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றன.
போப் என்பது லத்தீன் மொழியில் பொருள் தந்தை ,பப்பா என்ற சொல்லில் இருந்து உருவானது.. ஒரு போப் ஆண்டவர், தான் விரும்பி ராஜினாமா செய்யும் வரையும், மரணம் அடையும் வரையும் அந்த பதவியில் இருக்கலாம். அவரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது.
0
Leave a Reply