25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியாவுக்கு ஆசிய வில்வித்தையில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவுக்கு ஆசிய வில்வித்தையில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசிய வில்வித்தை ஸ்டேஜ் 1 தொடர்  தாய்லாந்தின் பாங்காக் நகரில் ரீகர்வ் பிரிவில் ஆண்கள் அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியாவின்  சுஹ்ஜெய்ன், தேவாங்க், ஜூயல் இடம் பற்ற இந்திய அணி, தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து இருந்தது.

 இந்திய அணி, நேற்று நடந்தகாலிறுதியில் ,மங்கோலியாவை சந்தித்தது.ஷு ட் ஆப்' வரை சென்ற, இப் போட்டியில் இந்தியா  29-27 என வெற்றி பெற்றது.அரையிறுதியில் இந்திய அணி, மலேசியாவை 5-1 என்ற கணக்கில், வென்று பைனலுக்கு  முன்னேறியது.

 இந்தியாவின் சிகிதா, தேஜல், ராஜ் கவுர்இடம் பெற்ற அணி, பெண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில் ,தகுதிச்சுற்றில்  'நம்பர்-1' இடம்பெற்றது. நேற்று நடந்த காலிறுதியில் இந்திய அணி, 232-222 எனஹாங்காங்கை வென்று,அரையிறுதியில் இந்திய அணி, 229-226 என தாய்லாந்தை வீழ்த்தியது. பைனலில் (நாளை) இந்தியா-கஜகஸ் தான் மோத உள்ளன.

பெண்கள் அணிகளுக்கான ரீகர்வ் ,அரையிறுதியில் இந்தியாவின் ரிதி, கீர்த்தி, ருமா இடம் பெற்ற அணி, 1-5 என சீனாவிடம் தோற்றது. அடுத்து நடந்த போட்டியில் இந்திய அணி 5-1 என மலேசியாவை வீழ்த்தி, வெண்கலம் கைப்பற்றியது. 

இந்தியாவின் ரஜத் சவுகான், ரிஷாப், பிரதமேஷ் இடம் பெற்ற அணி, ஆண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவு அரையிறுதியில் தகுதிச்சுற்றில் ,'நம்பர்-1' இடம் பிடித்தது. எனினும் அரையிறுதியில்  வியட்நாமிடம் இந்திய அணி, 233-234 என தோற்றது.அடுத்து நடந்த போட்டியில்  234-232  என பூடானை சாய்த்து, வெண் கலம் வசப்படுத்தியது.

 இந்தியாவின் ரிதி, பெண்களுக்கான தனிநபர் ரீகர் பிரிவு அரையிறுதியில் ,6-0 என மலேசியாவின் ஜோயேடனை வென்று, பைனலுக்குள் நுழைந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News