25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அரசு மருத்துவமனைகளில் அதிகளவு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு மருத்துவமனைகளில் அதிகளவு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (24.03.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே அதிகப்படியான குடும்ப நல அறுவை சிகிச்சை செய்தமைக்காக மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றமைக்காக விருதுகள் பெற்ற  மருத்துவ அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்களிடம் பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2023-24 ஆம் ஆண்டில்  நடைபெற்ற குடும்பநல அறுவை சிகிச்சைகளில் 4129 குடும்ப நல அறுவை சிகிச்சைகள் செய்து மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

மேலும், 2023-24 ஆம் ஆண்டில்  மாநில அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற குடும்ப நல அறுவை சிகிச்சைகளில் 354 பெண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சைகள் செய்து, விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.அதன்படி, முதலிடத்திற்கான விருதினை பெற்ற இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பாபுஜி அவர்களும், இரண்டாமிடத்திற்கான விருதினை பெற்ற கன்னிச்சேரிபுதூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆரோக்கிய ரூபன்ராஜ் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்நிகழ்வில் துணை இயக்குநர்(குடும்ப நலம்) மரு.விமலா அவர்கள், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, துணை இயக்குநர்(காசம்) மரு.கே.ராஜன், துணை இயக்குநர்(தொழுநோய்) மரு.மணிகண்டன், மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News