25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மனித உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ள அவகோடா பழம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மனித உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ள அவகோடா பழம்.

மத்திய அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது,'அவகோடா' பழம். இது,'ஆனைகொய்யா' என்று, தமிழில் அழைக்கப்படுகிறது. மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் குவாடமாலா நாடுகளை பூர்வீகமாக கொண்டது.16ம் நுாற்றாண்டில், ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இருந்து,உலகம் முழுவதும் பரவியது.

இப்பழத்தில், மனித உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன. நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்,'ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்டவையும் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.கர்ப்பிணியர் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் அன்னையர், இதை உண்பதை தவிர்ப்பது நல்லது.

அவகேடோ பழம் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, இரத்த நாளங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும்.இதற்கு அவகேடோ பழத்தில் உள்ள க்ளுடாதியோன் தான் காரணம்.இது புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களையும் வெளியேற்றும்.மேலும் அவகேடோவில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இந்த பழத்தில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உடலின் தினசரி இயக்கத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. ஏனெனில் உடலில் இதயம், சிறுநீரகம் போன்ற செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை பொட்டாசியம் வழங்குகிறது.

அவகேடோவில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கச் செய்வதுடன், சோடியத்தால் உடலில் ஏற்படும் விளைவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

அவகேடோவில் லுடீன் மற்றும் சியாகசிந்தின் போன்ற மூலக்கூறுகள் அதிகளவில் நிறைந்துள்ளது. இந்த மூலக்கூறுகள் கண் பார்வையில் ஏற்படும் மாகுலர் சிதைவு செயல்முறையைத் தாமதப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News