25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் கோவைக்காய் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் கோவைக்காய் .

கோவைக்காய் என்பது இந்தியாவில் பரவலாக கிடைக்கும் ஒரு காய் வகையாகும். வாரத்திற்கு ஒரு நாளாவது கோவைக்காயை சமைத்து உண்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்து பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்கள் ஆகியவற்றை  குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

கோவைக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் இன்சுலின் உணர்திறன் மேம்படுகிறது.வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண்  ஆறிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான அமைப்பைச் சீராக்கி, மலச்சிக்கலைத் தடுக்கிறது.இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த கோவைக்காய், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது.எனவே, இந்த எளிய காய்கறியை உங்கள் தினசரி உணவில் ஒரு பகுதியாக சேர்ப்பது மிகவும் புத்திசாலித்தனமான உணவு தேர்வாகும். கோவைக்காயை பொரியல், கூட்டு, சாம்பார் என பலவிதமாக சமைத்து சாப்பிடலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News