ராஜபாளையத்தில் மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே .
ராஜபாளைய நகராட்சியில் மாஸ்டர் பிளான், கார்பன் நியூட்ரல் திட்டங்களின்படி நீர் நிலைகளை தூய்மையாக பராமரிப்பது குறித்து ஆர்.சி.எஸ் அமைப்பு, நகராட்சி சார்பில் டிஜிட்டல் கணக்கெடுப்பு துவங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை, தாமிர பரணி குடிநீர் குழாய் இணைப்புகளுக்கான டிஜிட்டல் தரவுகள் எடுக்கும் பணி, ராம்கோ கம்யூனிட்டி சர்வீஸ் மூலம் பள்ளி கல்லுாரி மாணவர்களை கொண்டு அலைபேசி ஆப் மூலம் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
மாநில பசுமை கால நிலை ஆட்சி குழு உறுப்பினர் நிர்மலா ராஜா துவக்கினார். பி.ஏ. சி.எம் பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா, டாக்டர் சித்ரா மாண வர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
கட்டடத்தின், வகைப்பாடு, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதா?, இல்லையெனில் அதற்கான காரணம், ஆழ் துளைகுழாய் இணைப்பு உள்ளதா?, பொதுகழிப்பறை பயன்படுத்துகிறீர்களா? உள்ளிட்ட 14 வகையான கேள்விகளுடன், வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
அதிகாரிகள் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைப் பதன் மூலம் பராமரிப்பு பணிகளில் துல்லியமாக மேற்கொள்ள முடியும் என தெரிவித்தனர்.
0
Leave a Reply