25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முதலமைச்சரின் விடியல் பயணத்திட்டம் மூலம் 11.37  கோடி மகளிர்கள்  திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதலமைச்சரின் விடியல் பயணத்திட்டம் மூலம் 11.37 கோடி மகளிர்கள் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர் .

முதலமைச்சரின் விடியல் பயணத்திட்டமானது,  அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் இல்லதரசிகள், உயர்கல்வி பயிலும் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்.
இத்திட்டமானது தமிழகத்தை பின்பற்றி  கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில், அனைத்து தரப்பு மக்களிடத்திலும் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி, சுயதொழில் செய்யும் பெண்கள், இலவச பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள், குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் தாய்மார்கள், குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு அழைத்து செல்லும் பெண்கள், வயதான பெண்கள்; மற்றும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.
அரசுப்பேருந்துகளில் அனைத்து மகளிர் , திருநங்கைகள் , மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்த திட்டத்தின் வாயிலாக 445 கோடி முறை பயணம் செய்து  மாதந்தோறும் ரூ.888  வரை  சேமிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விருதுநகர்  மாவட்டத்தில், இத்திட்டத்தின் வாயிலாக  மூன்று ஆண்டுகளில் 11.27 கோடி மகளிர்கள், 73,552 திருநங்கைகள், 9.44 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 11.37 கோடி நபர்கள் அரசு  பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.
மேலும், பொது போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும் பெண்களின் சமூக  பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்தாக அமைந்துள்ளதால், அனைத்து தரப்பு மக்களிடமும் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News