25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சாத்தூர் ஊராட்சி ஒன்றியஆய்வுத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து  ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாத்தூர் ஊராட்சி ஒன்றியஆய்வுத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,  அவர்கள் (04.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அதன்படி சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், கே.மேட்டுப்பட்டி கிராமத்தில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டங்களின் கீழ் ரூ.25.11 இலட்சம் மற்றும் ரூ.12 இலட்சம் மதிப்பில் இரண்டு சமுதாய நீர் சேகரிப்பு புதிய குளங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,என்.மேட்டுபட்டி கிராமத்தில்; மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.96 இலட்சம் மதிப்பில் ஆடு மற்றும் மாட்டுக் கொட்டகைகள் கட்டப்பட்டுள்ளதையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,என்.மேட்டுபட்டி கிராமத்தில்; உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.49.30 இலட்சம் மதிப்பில் பள்ளி வளாக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,எம்.நாகலாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.72 இலட்சம் மதிப்பில் சமுதாய நீர் சேகரிப்பு புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,நென்மேனி ஊராட்சி வன்னிமடை கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News