25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


துருப்பிடித்த ஷட்டர்கள் பாதிப்பில் அலப்பச்சேரி கண்மாய் விவசாயிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

துருப்பிடித்த ஷட்டர்கள் பாதிப்பில் அலப்பச்சேரி கண்மாய் விவசாயிகள்.

280 ஏக்கர் பாசன பரப்புடன் அய்யனார் கோவில் ஆற்று நீர் நேரடியாக ஒரு பங்கும், கிருஷ்ணாப்பேரி கண்மாய் உபரி   நீர் கண்மாய்க்கானநீர்வரத்துஆதாரமாக தென்காசிமெயின்ரோட்டில்அலப்பச்சேரிகண்மாய்உள்ளதுநெல்,வாழை,கரும்புஉள்ளிட்டசாகுபடிபயிர்கள்அதிகம்விளைவிக்கப்படுகிறது. மேற்கு, கிழக்கு,நடு என மொத்தம் மூன்று பாசன மதகுகள் உள்ள நிலையில் கிழக்கில் உள்ள மதகு திறக்க முடிவதில்லை.

கண்மாய்க்குள் சீமை கருவேல மரங்கள் புதர்களாக வளர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிக்கின்றன. இதனால் தண்ணீர் இருப்பு வேகமாக ஆவியாகி கோடை காலங்களில் பாசனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேறி வெங்காநல்லுார் செல்லும் 25 அடி அகல ஓடையும் ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது. இதில் விவசாய விளைப் "பொருட்களை கொண்டு சென்று வந்த நிலையில் தற்போது மாட்டு வண்டி மட்டும் செல்லும்படியாக மாறிவிட்டது.

விவசாய தேவைக்கு என ஒதுக்கப்பட்ட கண்மாய் மண்ணை இந்த ஆண்டு பல்வேறு வணிக தேவைகளுக்காக அரசு, தனியார் அள்ளிச் சென்றதால் கண்மாய் உள்பகுதி சிறிய தெப்பமாக குழிகளுடன் காணப்படுகிறது. நகராட்சி அடுத்த பகுதியில் உள்ளதால் குடியிருப்பின் கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டும் இடமாக தென்காசி மெயின் ரோட்டில் உள்ள நீர் வரத்து ஓடையை மாற்றியுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News