.பாதாம் அல்வா
தேவையான பொருட்கள்:
பாதாம் - 1 கப்,
சர்க்கரை - 1 முதல் 1/4 கப்,
நெய் - 1/2 கப்,
காய்ச்சிய பால் - 1/4 கப்,
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி,
குங்குமப்பூ - சிறிதளவு (பாலில் ஊறவைத்தது) .
செய்முறை:
பாதாமை வெதுவெதுப்பான நீரில் 1 முதல் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய
பாதாமின் தோலை நீக்கிவிட்டு, மிக்ஸியில் சேர்த்துக்கொள்ளவும்.
அதனுடன் காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து, மிகவும் நைஸாக அல்லாமல் சற்று
கொரகொரப்பாக (ரவை பதத்திற்கு) அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், அரைத்த பாதாம் விழுதைச்
சேர்க்கவும். மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
பாதாமில் உள்ள ஈரப்பதம் குறைந்ததும், சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து கிளறவும்.
சர்க்கரை கரைந்து அல்வா இளகும்.
சர்க்கரை முழுமையாகக் கரைந்து அல்வா கெட்டியாக வரும் வரை மிதமான தீயில்
கிளறவும். மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாகச் சேர்க்கவும்.
அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல், சுருண்டு திரண்டு வரும் போது ஏலக்காய் தூள் சேர்த்து
இறக்கவும். சுவையான, நாவில் கரையும் மணமணக்கும் பாதாம் அல்வா தயார்.
0
Leave a Reply