25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் மத்தியில் கிராமிய கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் மத்தியில் கிராமிய கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

விருதுநகர் நகராட்சி மாரியம்மன் கோவில் அருகில், மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு,  கலைக்குழுவினரின் தேர்தல் விழிப்புணர்வு  நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (08.04.2024) துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மூலம் 18 வயது நிரம்பிய முதல் மற்றும் இளம் தலைமுறை, மாற்றுத்திறனளிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நடைபெறவுள்ள 100 சதவீதம் வாக்குப்பதிவினை எய்திடும் வகையிலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தியும், பொதுமக்களிடையே நேரடியாக விளக்க கூட்டம் நடத்துதல், விழிப்புணர்வு பேரணி, துண்டுப்பிரசுரம் வழங்குதல், கையெழுத்து இயக்கம் நடத்துதல், உறுதி மொழி எடுத்தல் போன்ற நிகழ்வுகள் மூலமாகவும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டி, வீடு வீடாகச் சென்று வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம் வழங்குதல், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்துகள், வங்கிகள், வங்கி ஏ.டி.எம் மையங்கள், தபால் நிலையம், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் (ளுவiஉமநசள) ஒட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்துதல், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் திரையிடுதல், தொலைகாட்சிகள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் சாத்தூர் வட்டத்தில் சாத்தூர் பேருந்து நிலையத்திலும், வெம்பக்கோட்டை வட்டத்தில் ஆலங்குளம் பேருந்து நிலையத்திலும், விருதுநகர் வட்டத்தில் மாரியம்மன் கோவில் அருகிலும், இராஜபாளையம் வட்டத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகிலும், வத்திராயிருப்பு வட்டத்தில் முத்தாலம்மன் கோயில் திடலிலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் ஆண்டாள் திருக்கோயில் வளாகத்திலும், சிவகாசி வட்டத்தில் சிவன் கோயில் வளாகத்திலும், காரியாபட்டி வட்டத்தில் காரியாபட்டி பேருந்து நிலையத்திலும், அருப்புக்கோட்டை வட்டத்தில் சிவன் கோயில் அருகிலும், திருச்சுழி வட்டத்தில் பேருந்து நிறுத்தத்திலும் தேர்தல் விழிப்புணர்வு பொதுமக்களை எளிதாக சென்றடையும் வகையில், கலைக்குழுவின் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை எய்திடும் வகையிலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தியும், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் போன்ற கிராமிய கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதன்படி,  விருதுநகர் மாரியம்மன் கோவில் அருகில் கிராமிய கலைக்குழுவினரின்  தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News