25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சட்டமன்ற பொது தேர்தல், 2026 நடைபெறுவதையொட்டி பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் வருகை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சட்டமன்ற பொது தேர்தல், 2026 நடைபெறுவதையொட்டி பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் வருகை.

எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகள் எந்தவித சந்தேகங்களுக்கும் இடமின்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக, இந்திய தேர்தல் ஆணையம் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும்  தேர்தல் பொது பார்வையாளர்களாக  இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும்,  செலவின பார்வையாளர்களாக இந்திய வருவாய் பணி அலுவலர்களையும், ஒருங்கிணைந்த காவல் பார்வையாளராக இந்திய காவல் பணி அலுவலரையும்  நியமனம் செய்து ஆணையிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் பொதுப்பார்வையாளர்களாக 202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு திரு.உதயன் மிஷ்ரா, I A S., அவர்களும் (9489985870), 206- விருதுநகர் மற்றும் 207- அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு.அனுப்குமார் யாதவ், I A S., அவர்களும்(9489985872), 208- திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.சஞ்சீவ் ஶ்ரீவாஸ்தவா, I A S ., அவர்களும்(9489985873) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செலவின பார்வையாளர்களாக 202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு திரு.சுக்செயின் சிங்,இ.வ.ப., அவர்களும்(9489985874), 204- சாத்தூர் மற்றும் 205- சிவகாசி சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு.அனில்குமார்,இ.வ.ப., அவர்களும்(9489985875), 206- விருதுநகர் மற்றும் 207- அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு.நாயன்ஜோதி நாத், இ.வ.ப., அவர்களும்(9488985876), 208- திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.வாக்மரே ஜெய்,இ.வ.ப., அவர்களும்(9488985877) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் திரு.அகிலேஷ் குமார் சௌராசியா,இ.கா.ப., அவர்களை (9488985878) ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

ஆதலால் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகள் தொடர்பான தேர்தல் பணிகள் குறித்த புகார்கள் ஏதும் இருப்பின், தொடர்புடைய சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பார்வையாளர்களின் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் வாயிலாகவோ, நேரிலோ தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News