2021-23 ஆம் ஆண்டிற்கான ‘கலைமாமணி’ விருதுகள்.
2021,2022 மற்றும்2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளைப் பெற90 கலைஞர்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இலக்கியம், இசை, நடனம், நாடகம், சினிமா மற்றும் பாரம்பரிய கலைகள் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன
இலக்கியத்திற்கான பாரதியார் விருதைப் பெற இலக்கியவாதி என். முருகேச பாண்டியனும், இசைக்கான எம்.எஸ். சுப்புலட்சுமி விருதுக்கு‘பத்ம பூஷண்’ கே.ஜே. யேசுதாஸும், நடனத்திற்கான பாலசரஸ்வதி விருதுக்கு பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
. தமிழ்நாடு அரசின்‘கலைமாமணி’ விருதுகள் 2021,2022 மற்றும்2023 ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெற நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, விக்ரம் பிரபு, ஜெயா வி.சி. குகநாதன், கே. மணிகண்டன் மற்றும் எம். ஜார்ஜ் மரியன் ஆகியோர் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளின் கீழ் பட்டியலை மாநில அரசு புதன்கிழமை (செப்டம்பர் 24, 2025) வெளியிட்டது.
திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, கலை இயக்குனர் ஜே.கே. என்கிற எம். ஜெயக்குமார், ஸ்டண்ட் மாஸ்டர்‘சூப்பர்’ சுப்பராயன், பாடலாசிரியர் விவேகா, இசை இயக்குனர் அனிருத், பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குனர்‘சாண்டி’ என்கிற ஏ. சந்தோஷ் குமார் ஆகியோரும் இந்த ஆண்டுகளுக்கான‘கலைமாமணி’ விருதைப் பெற உள்ளனர்..
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலிருந்து சங்கங்கள் பிரிவின் கீழ் சென்னையில் உள்ள தமிழ் இசை சங்கம்(ராஜா அண்ணாமலை மன்றம்) விருதுக்கும், நாடகக் குழு பிரிவின் கீழ்‘கலைமாமணி’ எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடகக் குழு விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அக்டோபரில் சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அங்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.
0
Leave a Reply