25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


.காலிஃபிளவர்  கிரேவி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.காலிஃபிளவர்  கிரேவி.

தேவையான பொருட்கள் 

காலிபிளவர் - 1 (சிறு துண்டுகளாக நறுக்கி, வேகவைத்தது),வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2-3 (கீறியது),மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (அல்லது காரத்திற்கு ஏற்ப),மல்லித் தூள் - 1 டீஸ்பூன்,கரம் மசாலா தூள் -  அரை டீஸ்பூன்,

சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன் ,கடுகு, உளுந்து – தாளிக்க,

கறிவேப்பிலை – சிறிதளவு,உப்பு - தேவையான அளவு,கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க 

செய்முறை 

காலிபிளவரை சிறு துண்டுகளாக நறுக்கி, வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து5-7 நிமிடங்கள் வேகவைத்து, தண்ணீரை வடித்து 

தனியாக வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரைவதக்கவும்.இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

நறுக்கிய தக்காளி சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

வேகவைத்த காலிபிளவர் துண்டுகளையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து மசாலாவுடன் நன்கு கலக்கவும். கிரேவிக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா தூள் சேர்த்து, 5-10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கிரேவி கெட்டியானதும், கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும். சுவையான காலிபிளவர் கிரேவி தயார். இதனை சப்பாத்தி, 

பூரி அல்லது சாதத்துடன் பரிமாறலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News