சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: அர்ஜுனுக்கு 3-வது இடம்.
சென்னையில் நடைபெற்ற 4-வது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
கடைசி சுற்றில் பிரான்சின் அலிரேசாவுடன் மோதிய அர்ஜுனின் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதேபோல் குகேஷ்-நைமான் மற்றும் நிகால் சரின்-பிரனேஷ் மோதல்களும் சமநிலையில் நிறைவடைந்தன.
இறுதியில் 4.5 புள்ளிகளுடன் அலிரேசா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டிமிட்ரி 2-வது இடத்தையும், அர்ஜுன் 3-வது இடத்தையும் பிடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய உலக சாம்பியன் குகேஷ் 8-வது இடத்தில் நிறைவு செய்தார்.
0
Leave a Reply