25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முக்கிய அறிவிப்பு: இனி RTO அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறையும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முக்கிய அறிவிப்பு: இனி RTO அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறையும்.

போக்குவரத்து சேவைகளை மேலும் எளிமையாக்கும் வகையில், மாநிலம் முழுவதும் RTO சேவைகள் படிப்படியாக முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய நடைமுறையின் கீழ், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அதே நாளில் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் (DL) வழங்கப்படும்.

மேலும், புதிய வாகனங்களுக்கான பதிவு சான்றிதழை (RC) ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

‘Anywhere Registration / Licensing’ என்ற முறையின் மூலம், மக்கள் தங்களுக்கு வசதியான எந்த இடத்திலிருந்தும் வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளைப் பெற முடியும்.

மொபைல் செயலி மற்றும் இணையதளம் வாயிலாக பல்வேறு போக்குவரத்து சேவைகளை ஆன்லைனிலேயே பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

செப்டம்பர் 15, 2026 முதல் மாநிலம் முழுவதும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவைகள் எளிதாகவும், விரைவாகவும், துல்லியமாகவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News