தம்பதிகளான பெருமாள் திருப்பதி மலை மீதும், தாயார் ஏன் கீழே உள்ளார்?.
பெருமாளுக்கும்பத்மாவதி தாயிருக்கும் திருமணம் முடிந்து, பத்மாவதி தாயார், பெருமிதமாக தனது சீர்வரிசைகளை பெருமாளிடம் காட்டினார். உங்களுக்கு ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் என்றாராம். பெருமாளோ இதில் எனக்குப் பிடித்த கறிவேப்பிலை, கனகாம்பரம் இரண்டு பொருட்கள் இல்லை என்றாராம்.
தாய் வீட்டிற்கு சென்று இரு பொருட்களையும் கொண்டு வருகிறேன் என்று தாயார்கூறியுள்ளார். அதற்குப் பெருமாள் சரி, இருட்டுவதற்கு முன் இங்கே வந்து விட வேண்டும் என்றாராம். பிறந்த வீட்டிலிருந்து திரும்பிய தாயார் இருட்டுவதற்கு முன் திருச்சானூர் வரை தான் வர முடிந்தது.
ஆகையால்அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. திருமலை பூஜையில் கனகாம்பரமும்படையலில் கறிவேப்பிலையும் இருப்பதில்லை. ஆனால் இன்று வரை பெருமாள் இரவில்திருச்சானூருக்கு சென்று விடிவதற்கு முன் திருமலைக்கு வந்து விடுவதாகஐதீகம்.
0
Leave a Reply