25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேர மாவட்ட அளவிலான கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டு அறை: மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேர மாவட்ட அளவிலான கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டு அறை: மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், 2025–2026 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களும் விடுபடாமல் 100% உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் நோக்கில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள "மாவட்ட அளவிலான கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டு அறையினை" (Higher Education Guidance Control Room) மாவட்ட ஆட்சியர்  அவர்கள் (03.06.2026) அன்று திறந்து வைத்தார்.

மையத்தின் செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:

இக்கட்டுப்பாட்டு அறை மூலம் உயர்கல்வி தொடர விரும்பும் தகுதியான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பின்வரும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ பெற்றுக்கொள்ளலாம்:

படிப்பு சார்ந்த விவரங்கள்:

மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகள், மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள் (Professional Courses) தொடர்பான சேர்க்கை விவரங்கள்

கூடுதல் வசதிகள்:

அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதி வசதிகள், வங்கிக் கல்விக் கடன்கள் (Education Loans), கல்லூரிச் சேர்க்கைக்கான இணையவழி (Online) விண்ணப்பத் தேதிகள் மற்றும் சேர்க்கை நடைமுறைகள் குறித்த துல்லியமான தகவல்கள்.

துணை ஆட்சியர் தலைமையில் சிறப்புக் குழு:

மாணவர்களுக்குத் தகுந்த உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைகளைத் துல்லியமாக வழங்குவதற்காக, துணை ஆட்சியர் (Sub-Collector / Deputy Collector) மட்டத்திலான உயர் அதிகாரி ஒருவரின் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அமைத்துள்ளார். இக்குழுவில் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:

இக்கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டறையை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கீழே குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்கள் வாயிலாகத் தொடர்புகொண்டு, தங்களது சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம்:

அலைபேசி எண்கள்:

75985 10114, 96988 10699, 99769 03873

விருதுநகர் மாவட்டத்தில் எந்தவொரு மாணவரும் பொருளாதாரச் சூழ்நிலை அல்லது வழிகாட்டுதல் இன்மை காரணமாக உயர்கல்வி பயிலும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இக்கட்டுப்பாட்டறை தொடர்ந்து செயல்படும் என மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News