25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா இணை சீருடைகளை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா இணை சீருடைகளை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையாபுரம்  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்  (29.07.2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ /மாணவியர்களுக்கு விலையில்லா இணை சீருடைகளை  மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1474 பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 91,096 மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கப்படவுள்ளது.சமூக நலத்துறையின் மூலம், மாவட்டத்தில்  6 தையல் கூட்டுறவு அமைப்பில் உள்ள மகளிர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு குழந்தைக்கும் அளவெடுத்து, தைத்து பின்னர் நேரடியாக குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையாபுரம்  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்   சத்துணவு உண்ணும் 143 பள்ளி மாணவ /மாணவியர்களுக்கு விலையில்லா இணை சீருடைகளை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News