25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நீர்வரத்து அதிகரிப்பால் அய்யனார் கோயில் ஆற்றில் குளிக்க வனத்துறை தடை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நீர்வரத்து அதிகரிப்பால் அய்யனார் கோயில் ஆற்றில் குளிக்க வனத்துறை தடை

தொடர் மழை  காரணமாக இராஜபாளையம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி வனத்துறை  சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க தடை விதித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை எதிர்பார்த்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்த லேசான மழையால் ஈரப்பதம் பெற்றது. நேற்று முன்தினம் இரவு, நேற்று மதியம் முதல் பெய்த கன மழையால் ராஜபாளையம் மாவரிசி அம்மன், முள்ளிக் கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது  

இதன் காரணமாக நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஆறாவது மைல் நீர் தேக்கத்திற்கு ஆற்று நீர் தடுப்பணை மூலம் நீர் திருப்பி விடப்பட்டு தேக்கப்படுகிறது. தடுப்பணையைத் தாண்டி ஆற்றில் நீர் வழிந்து செல்கிறது.

 மழை தொடர்ந்தால் புதுக்குளம், பிரண்டைகுளம், புளியங்குளம் போன்ற அடுத்தடுத்து உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு  நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என விவசாயிகள், எதிர்பார்த்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News