25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, ஏகம் அறக்கட்டளை மற்றும் கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, ஏகம் அறக்கட்டளை மற்றும் கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, ஏகம் அறக்கட்டளை மற்றும் கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்  (25.05.2024) பார்வையிட்டார்.
இம்முகாம் மூலமாக விருதுநகர் சுகாதார பிரிவு மாவட்டத்தில் 60 குழந்தைகள் மற்றும் சிவகாசி சுகாதார பிரிவு மாவட்டத்தில் 90 குழந்தைகள் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் (Rashtriya Bal Swasthya Karyakram-RBSK) ) குழு மூலமாக அழைத்து வரப்பட்டனர்.
மேலும், இக்குழந்தைகளுக்கு இருதய நோய் நிபுணர்கள் இருதய பரிசோதனையான  ECHO SCAN  செய்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.பின்னர் அவர்களில் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் மூலம் அழைத்து வரப்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவர்;. அவர்களுக்கான அறுவை சிகிச்சைகள் கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) மூலமாக நடைபெறும் என்று தெரிவித்தார்கள்.
இம்முகாமில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்.மரு.கி.சீதாலெட்சுமி, துணை முதல்வர் மரு.திருமதி.ச.அனிதா மோகன், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.திருமதி.வே.யசோதாமணி (விருதுநகர்), மரு.திரு.நா.கலுசிவலிங்கம் (சிவகாசி), மருத்துவர்கள் திரு.மு.கல்யாணசுந்தரம், திரு.இரா.விஜயக்குமார் (இருதய நோய் நிபுணர்கள், ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, கோவை) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News