இந்தியாவின் மாளவிகா மலேசிய பாட்மின்டனில் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார்
மலேசியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையரில் உலகின் 'நம்பர்-26' ஆக உள்ள பிரனாய், 28 வது இடத்திலுள்ள கனடாவின் பிரியன் யங் மோதினர். பிரனாய் 21-12, 6-3 என முன்னிலையில் இருந்த போது, மைதான பிரச்னை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.நேற்று மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. பிரனாய் இரண்டாவது செட்டை 17-21 என இழந்தார். பின் நடந்த மூன்றாவது, கடைசி செட்டை பிரனாய் 21-15 என வசப்படுத்தி னார். முடிவில் பிரனாய் 21-12, 17-21, 21-16 என போராடி வென்றார்.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ‘யூத்' ஒலிம்பிக் முன்னாள் சாம்பியன், இந்தியாவின் மாளவிகா, 2 முறை ஜூனியர் உலக சாம்பியன் ஆன, மலேசியாவின் ஜின் வெய் மோதினர். இதில் மாளவிகா, 21–15, 21–16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply