ஐ.டி. எப்., டென்னிஸ் மாயா ரேவதி வெற்றிபெற்று , காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
டில்லியில் ஜூனியர் பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந் தியாவின் 15 வயது வீராங்கனை மாயா ரேவதி பங்கேற்கிறார். கோவையை சேர்ந்த ரேவதி, சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள நடாலின் மல்லோர்கா பயிற்சி அகாடமியில் சேர்ந்துள்ளார்.
நேற்று தனது முதல் சுற்றில் மாயா ரேவதி, இத்தொடரின் 'நம்பர்-4' அந்தஸ்து பெற்ற துருக்கியின் அடாகும்ருவை சந்தித்தார்.. முடி வில் மாயா ரேவதி, 6-1, 7-6 என்ற நேர் செட் கணக் கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
0
Leave a Reply