காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர்.
தமிழக அரசின் காலை உணவு திட்டத்திற்கு இனி 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது.
முதலில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அறிமுகமான இந்தத் திட்டம், பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது சுமார் 19.34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், வரும் செப்டம்பர் 17 முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 15.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். திட்டத்திற்காக ஆண்டுதோறும் ₹343 கோடி செலவிடப்பட உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் ₹217 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply