25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


கால்நடைகளுக்கான, கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 01.07.2026 முதல் 31.07.2026 வரை 31 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கால்நடைகளுக்கான, கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 01.07.2026 முதல் 31.07.2026 வரை 31 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பசு, எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 01.07.2026 முதல் 31.07.2026 வரை அனைத்து கிராமங்கள் /நகராட்சி / மாநகராட்சியில் செலுத்தப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,40,435 பசுக்கள் 865 எருமைகள் என மொத்தம் 1,41,300 கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் நோய் தடுப்பூசி (FMD) செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் நடைபெற உள்ளது.

இந்த நோய் தாக்கும் பட்சத்தில் கால்நடைகளுக்கு சரிவர உணவு உண்ண இயலாநிலை, அதீத காய்ச்சல் மற்றும் வாயில் உமிழ்நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதனால் கால்நடைகளில் பால் உற்பத்தி பாதிக்கப்படும். மேலும் இந்நோய் மிக விரைவாக பரவும் தன்மை கொண்டது.

இதனை தடுப்பதற்கு விருதுநகர் மாவட்டத்தில் 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் பணிபுரிவோரைக் கொண்டு ஒரு கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி குழுவினரால் இலவசமாக FMD தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.

மேலும், தடுப்பூசி பணி முடிவடைந்த உடன் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆதார் எண் மற்றும் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு வரும் OTP - யை தடுப்பூசி குழுவினருக்கு தெரிவித்து பாரத் பசுதான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் அரசின் கால்நடை பராமரிப்புத்துறை நலத்திட்டங்களை பெறலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News