25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் கல்லூரணி எஸ்.பி.கே.தொடக்கப்பள்ளியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் கல்லூரணி எஸ்.பி.கே.தொடக்கப்பள்ளியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் எஸ்.பி.கே.தொடக்கப்பள்ளியில்,  (15.07.2024)  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடங்கி வைத்தார்.
.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராம, நகர்புறபகுதிகளில் உள்ள குழந்தைகள் பள்ளிகள் தூரமாக இருப்பதாலும், சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதை, கருத்தில் கொண்டும், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்குவதற்காகவும் இந்திய நாட்டிலேயே முன்னோடி திட்டமான அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்”-னை கடந்த 15.09.2022 அன்று முதற்கட்டமாக தொடங்கி வைத்தார்கள்.இரண்டாம் கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் 25.08.2023 அன்று துவக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்றாம் கட்டமாக இன்று அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர்; அவர்கள் 15.07.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள  3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.இன்றைக்கு  மகத்தான உன்னதமான திட்டமாக அறியப்பட்டிருக்கக்கூடிய    முதலமைச்சர் அவர்களின் காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், இன்றைக்கு விரிவாக்கக்கூடிய  நிகழ்வினை  முதலைமைச்சர் அவர்கள் இன்று துவங்கி வைத்திருக்கிறார்கள்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் எஸ்.பி.கே.தொடக்கப்பள்ளியில் மட்டும் 159 குழந்தைகள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இத்திட்டத்தின் கீழ் பயடைவார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக காரியாபட்டி வட்டாரத்தில் 69 அரசு துவக்கப்பள்ளிகளில் பயிலும் 3486 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும், இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் உள்ள 659 அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 35,000 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்று மூன்றாம் கட்டமாக,  மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 23 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1658 மாணவ, மாணவியர்களும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 28 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1469 மாணவ, மாணவியர்களும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 8 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 326 மாணவ, மாணவியர்களும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 24 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1191 மாணவ, மாணவியர்களும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 11 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 513 மாணவ, மாணவியர்களும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 45 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த  3732 மாணவ, மாணவியர்களும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 995 மாணவ, மாணவியர்களும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 16 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1171 மாணவ, மாணவியர்களும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 17 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2252 மாணவ, மாணவியர்களும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 40 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2324 மாணவ, மாணவியர்களும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 23 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1006 மாணவ, மாணவியர்களும் என ஆக மொத்தம் 255 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 16,637 மாணவ, மாணவியர்கள் காலை உணவு பெற்று பயனடைய உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News