வேர் முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ குணமுடையது வேப்பமரம்.
வேப்பமரத்தில் பூவரும்.அந்தப் பூவை துவையலாக செய்து சாப்பிடுங்கள், அல்லது ரசம் (ரசத்தில் குடம்புளிதான் சேர்க்க வேண்டும்). இல்லையென்றால் வெந்நீரில் கொதிக்க வைத்துநீராகவும் அருந்தலாம்.
நம் உடலுக்கு வேலி போல் காக்கும். நம் முன்னோர்கள் இதைப் பயன்படுத்தியே ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.
வேப்பிலையும் நம் ஆராவை சுத்தம் செய்யும்: பண்டைய காலத்தில் குழந்தைகள் ஏதாவது பயந்து இருந்தால் வேப்பிலை அடிப்பார்கள். நம் ஆராவை முழுவதுமாக தூய்மைப்படுத்தும் குணம் வேப்பிலைக்கு உள்ளது.
அதேபோல் பொடுகு பிரச்சனை, தலைமுடி உதிர்வது போன்றவர்க்கு வேப்பிலை இரவிலே தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில அந்த தண்ணீரில் தலை முழுகவும்.
எந்த தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கும். வெட்டுக்காயங்கள், பாத வெடிப்பு -வேப்பெண்ணை தடவினால் சரியாகிவிடும்.
அதேபோல் வாரம் மூன்று முறை வேப்பிலை சாறு குடியுங்கள். நல்ல குளிர்ச்சியை தரும். உடலை தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக வைந்திருக்கும்.
வேப்பம்பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது. இருந்தாலும் சரியாகிவிடும். ரத்தம் சுத்திகரிக்கும் உடல் உஷ்ணத்தை குறைக்கும். பித்தத்தை தணித்து மனம் சாந்தமடையும்.
0
Leave a Reply